வவுனியாவில் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (28.12.2016) மதியம் 1.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் மாவா எனப்படும் போதைப் பொருளுடன் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சோதனையை மேற்கொண்ட பொலிசார் வவுனியா, மன்னார் வீதியில் வைத்து குறித்த நபரிடம் இருந்து 3 கிலோகிராம் 500 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.