வவுனியாவில் தனியார் பேரூந்து விபத்து!!

245

 
வவுனியாவில் இன்று (29.12.2016) காலை 8.15 மணியளவில் தனியார் பேரூந்து ஒன்று பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி வீதி மூன்றுமுறிப்பு இ.போ.ச. சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ள இச்சம்வம் குறித்த மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்தின் மீது குருணாகலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மூன்றுமுறிப்பு இ.போ.ச. சாலைக்கு அருகாமையில் பேரூந்தின் நடுப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.