திடீர் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகை யில் காற்றின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் படகு ஒன்று கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினரினால் இந்த படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.7 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய பிரதேசங்களுக்கு இலகுவில் சென்று அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்டுவருவதற்கு உகந்த வகையில் இந்தப் படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இதன் காற்றாடி இறக்கை பகுதி நீர் மட்டத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ளமையினால் நீரில் மூழ்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு இலகுவாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர், பொறியியலாளர் கருணாசேக ஹெட்டி ஆர
ச்சியின் முன்னிலையில் வெலி சர கடற்படை முகாமில் அமைந் துள்ள கஜுகஹகும்புர வாவியில் கடந்த 20 ஆம் திகதி இந்த படகின் வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெற்றிருந்தது.