காற்றினால் இயங்கும் நவீன படகு இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது!!

262

 
திடீர் வெள்ள அனர்த்த நிலை­மை­க­ளுக்கு முகம்­கொ­டுக்கும் வகை யில் காற்றின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் படகு ஒன்று கடற்­படையினரால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டையின் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி பிரி­வி­ன­ரினால் இந்த படகு நிர்­மா­ணிக்கப்பட்­டுள்­ளது. இதற்­காக 1.7 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக கடற்­ப­டை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

நீரில் மூழ்­கிய பிர­தே­சங்­க­ளுக்கு இல­குவில் சென்று அனர்த்­தத்தில் சிக்­குண்­ட­வர்­களை மீட்­டு­வ­ரு­வ­தற்கு உகந்த வகையில் இந்தப் படகு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக கடற்­ப­டை­யினர் மேலும் தெரி­வித்­தனர்.

இதன் காற்­றாடி இறக்கை பகுதி நீர் மட்­டத்­துக்கு மேலாக அமைக்­கப்­பட்­டுள்ளமையினால் நீரில் மூழ்­கி­யுள்ள பகு­தி­க­ளுக்கு செல்­வ­தற்கு இல­கு­வாக அமை­யு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு செய­லா­ளர், பொறி­யி­ய­லாளர் கரு­ணா­சேக ஹெட்டி ஆர
ச்­சியின் முன்­னி­லையில் வெலி சர கடற்­படை முகாமில் அமைந் துள்ள கஜுகஹகும்புர வாவியில் கடந்த 20 ஆம் திகதி இந்த படகின் வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெற்றிருந்தது.