சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாகி மர்மமான முறையில் மரணமாகியுள்ள பெண் தொடர்பில் கொலன்னாவ கொடிக்காவத்தை பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் கடந்த நவம்பர் மாதம் சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்தார் எனவும் , 44 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரினால் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்பட்டமையை தொலைபேசியின் ஊடாக தனக்கு தெரிய படுத்தியிருந்ததாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறையிட்ட போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






