சார்ஜாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று ஆபிரிக்க பெண்களுக்கு சிறை!!

566

பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று ஆபிரிக்க பெண்களுக்கு சார்ஜா குற்றவியல் நீதிமன்றம் தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் தண்டனை காலம் முடிந்த பின்னர் அவர்களை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண்கள் நைஜீரியாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் 2 லட்சம் திராம்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

எமிரேட்ஸ் பொலிஸார் இந்த பெண்களை கைது செய்ய ஒற்றர் ஒருவரை பயன்படுத்தியுள்ளனர். ஹொட்டல் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

உகண்டாவை சேர்ந்த 27,32 மற்றும் 35 வயதான பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மூன்று பெண்களிடம் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் தாம் தினமும் 50 முதல் 100 வரையான ஆண் வாடிக்கையாளர்களை கையாண்டுள்ளதாக அவர்களில் இரண்டு பெண்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன் மற்றைய பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூறும் அளவுக்கு ஞாபகம் இல்லை எனக் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவரிடம் இந்த பெண்கள் 50 திராம்களை கட்டணமாக அறவிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு விசாரணைகளின் பின்னர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.