பெண் இராணுவச் சிப்பாயை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!!

624

பெண் இராணுவச் சிப்பாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக தேடப்பட்டு வந்த இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் பாதுக்க பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹாத்துடுவ பிரதேசத்தில் பெண் இராணுவச் சிப்பாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள சந்தேக நபர், இதற்கு முன்னர் 10 யுவதிகளுடன் பழகி வந்துள்ளார்.

சந்தேக நபர் இந்த யுவதிகளின் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவர்களை கைவிட்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் காரணமாக யுவதி ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.