வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை. இன்று மாலையும் இப்பகுதிக்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்குச் சென்றபோதும் அனுமதி வழங்கப்படவில்லை.
அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியபோதும் வெளியே காத்திருக்கும் மக்களுக்கான சாதகமான பதில் கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு தினங்களாக பொதுமக்கள் காத்திருப்பதுடன் அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் நெடுநேரம் காத்திருக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது.