மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்டவருக்கு நேர்ந்த அவலம்!!

910

நாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நாகொட பிரதேச சபையில் தொழில் புரியும் உடுகம கமகே பிரேமரட்ண (50) என தெரியவந்துள்ளது.

இவர் மரதன் ஓட்டப்போட்டியின் போது தரையில் விழுந்து மயக்கமுற்ற நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.