வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது!!

510

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த போது, கல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றுள்ளதுடன் போலியான ஆவணங்களை பயன்படுத்தி அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.