வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களினால் சம்பந்தனின் படம் எரிப்பு!!

250

 
வவுனியாவில் இன்று காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாகச் சென்று இறுதியில் அவரின் படம் எரியூட்டப்பட்டது.

இவ் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒப்பாரி வைத்தையும் காணக்கூடியதாக இருந்தது.