வவுனியா – மன்னார் மாவட்ட எல்லைக் கல் விசமிகளால் உடைப்பு!!

365

 
வவுனியா மாவட்டத்தையும் மன்னார் மாவட்டத்தையும் எல்லைப்படுத்தும் அடையாளக் குறியீட்டுக்கல் திட்டமிட்டு விசமிகளால் சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளது.

பிரமணாளங்குளம் – மடு பிரதான வீதியில் பிரமணாளங்குளத்தில் இருந்து 9.5 கிலோமீட்டர் தூரத்தில் வவுனியா மாவட்டத்தின் பெரியதம்பனை அமைந்துள்ளது.

அதனையடுத்து மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சான் அமைந்துள்ளது. இவ்விரு பகுதிகளுக்குரிய மாவட்டங்களை பிரித்துக் காட்டும் அடையாளக் குறிக் கல்லே திட்டமிட்டு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, இந்தப் பகுதியில் உள்ள வவுனியா மாவட்டத்திற்குரிய நிலப் பகுதிகள் மன்னார் மாவட்டத்திற்குள் கையகப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இது உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.