ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

216

இந்த ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

எதிர்காலத்தில் டெங்கு பரவும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் பாலித மஹிபால கூறினார்.

அது சம்பந்தமாக காணப்படுகின்ற சட்ட விதிமுறைகள் சம்பந்தமாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.