வவுனியா ஓமந்தையில் மரம் நடுகை!!

810

 
ஓமந்தை நாம்பன் குளத்தில் நேற்று முன்தினம் (30.12.2016) காலை 10.30 மணியளவில் நெல்சன் பவுண்டேசனால் மரம் நாட்டுகை நிகழ்வு இடம்பெற்றது.

நெல்சன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மரம் நாட்டுகை நிகழ்வானது சமூக நோக்கத்தோடு வவுனியா ஓமந்தை நாம்பன்குளத்தில் 200க்கு மேற்பட்ட மரங்களான காயா,முதிரை, மலைவேம்பு, கூழான், புளியமரம் போன்ற மரங்கள் கிட்டத்தட்ட 3ஏக்கர் நிலப்பரப்பில் இம் மரநடுகையானது இடம்பெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட வனவள அதிகாரி ஜி.டி.ஜி.சரத்குமார, மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவி பணிப்பாளர் ஜி.ஏ.ஜெ. பாலசூரிய, சுங்கங்கள் பணியக மாவட்ட பிரதான பொறியியலாளர் கெ.என்.டிபிள்யூ.கே. விமலரத்ன, வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி.கிஷோர் சுகந்தி, ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எஸ்.எ.சில்வா, கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.