இந்தியாவில் முத்தரப்பு தொடர் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பு!!

331

sl

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மூன்று நாடுகளின் கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை செயல் அலுவலர் சுபன் அகமது, இலங்கை கிரிக்கெட் சபையின் செயலர் நிஷந்தா ரணதுங்கா மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அலுவலர் சையது அஷ்ரஃபுல் ஹக் ஆகியோர் சென்னைக்கு வந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முத்தொடர் நடத்துவது குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை வாரிய பிரதிநிதிகளிடம் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐயின் தலைவர் பதவிலியிலிருந்து தாற்காலிகமாக விலகியுள்ள சீனிவாசன் உள்ளது குறிப்பிடத்தக்கது.