நாட்டு மக்கள் அனவரும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகின்றேன் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

505

பிறக்கும் 2017ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சாந்தி சமாதானமாக ஒன்றிணைந்து வாழ புதுவருடப்பிறப்பில் வாழ்த்துகின்றேன்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு மக்களுக்கு கிடைத்து புதுவருடத்தில் ஒற்றுமையாகவும் நல்லிணக்கமாக சேர்ந்து வாழவும் மக்கள் எதிர்கொள்ளும் சுமைகள் நீங்கி செல்வச் செழிப்புடனும் பிறக்கும் புதுவருடத்தில் கல்விக்கலாச்சாரம் மேலோங்கி நாட்டில் நிலவுகின்ற நல்லிணக்கம் அனைத்து மக்களையும் சென்றடைந்து அனைவருக்கும் இறை ஆசி கிடைக்க பிறக்கும் புதுவருடத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.

இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கினைப்புக் குழு இணைத்தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான கே.காதர் மஸ்தான் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.