உயர்தர பரீட்சை பெறுபேறுகனைத் தாமதித்தல் மாணவர்களுக்கு செய்யும் அநீதி : இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!!

795

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளைத் தாமதித்தல் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜனவரி 12ஆம் திகதியளவிலேயே பரீட்சை முடிவுகள் வெளியாகுமெனத் தெரிவித்திருக்கிறார்.

சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் தோற்றிய பிரயோகப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதால் முழுப் பெறுபேறுகளும் தாமதமாகவுள்ளதாக அவர் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.