புது வருடத்தில் மனைவிக்கு கணவரால் நடந்த சோகம்!!

476

அதுருகிரிய – பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளம் பெண் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவரை அவரது கணவரே கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.