பத்திரிகையாளராக உருவெடுக்கும் நயன்தாரா!!

428

நடிகை நயன்தாராவுக்கு 2017 ம் ஆண்டும் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கப்போகிறது என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.’அறம்’, ‘டோரா’ மற்றும் ‘கொலையுதிர் காலம்’ – அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதைகளை வரிசையாக கமிட் செய்துவைத்துள்ளார் .

அடுத்து அவர் ஒப்புக் கொண்டுள்ள படமும் ஹீரோயின் ஓரியன்டட்தான். புதிய இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இந்தப் படத்தை ஈராஸ் சவுத் நிறுவனம் தயாரிக்கிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மங்கோலியாவில் படமாகும் முதல் படம் இதுதான். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தப் படத்தில் தனது உறவுகளைத் தேடி நாடு நாடாக அலையும் பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார் நயன்தாரா.