
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிகொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.
திரைப்பட விநியோகஸ்தர் அன்புச்செழியன் புகாரின் பேரில் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிவசக்தி மீது கடந்த 2006ம் ஆண்டு அன்புச்செழியன் புகார் அளித்தார்.
வழக்கில் ஆஜராக சிவகச்தி பாண்டியனுக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
நீதிமன்ற பிடிவாரண்ட்டை அடுத்து சிவசக்தி பாண்டியனை பொலிசார் கைது செய்துள்ளனர்.





