விடைபெற்றார் பான் கீ மூன்!!

389

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றிய தென்கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் சேவை காலம் முடிந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் தனது பதவியிலிருந்து விடைபெற்றுள்ளார்.மேலும் நியூயோர்க்கில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் பேசியுள்ள பான் கீ மூன்,

2007 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை தான் செய்த பணிகளை நினைவு கூர்ந்துள்ளதோடு எதிர்வரும் நாட்கள் தன்னை சாதாரண மனிதனாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அடுத்தா ஐநா பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஹெடோனியோ கட்டர்ஸ் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில்,

உலக மக்களை அமைதிக்காக வழிநடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்கால உலக சமாதானத்திற்கான தனது அயராத பணிகளை தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.