பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!

290

asia cup

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை சென்னையில் இன்று முடிவு செய்யப்படுகிறது.

கடந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2012ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடத்தப்பட்டது. அடுத்த ஆசிய கிண்ணபோட்டியையும் வங்காளதேசத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

வருகிற 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 7ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது. போட்டிகள் நடைபெறும் திகதி, இடம் ஆகியவை அடங்கிய அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சென்னையில் இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆசிய கிண்ணப் போட்டி அட்டவணை முடிவு செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆசிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த முறை ஆசிய கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடந்ததால் இந்த முறை ஆப்கானிஸ்தானில் நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போதிய அவகாசம் இல்லாததால் பங்களாதேஷில் நடத்த முடிவு செய்யப்பட்டது.