வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2017) காலை 9 மணியளவில் அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார தலைமையில் அரச ஊழியர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றது.
தேசியக்கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சமய மதத் தலைவர்களின் ஆசிச் செய்தியினையடுத்து அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமானம் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தின் அனைத்து நிர்வாகக் கிளைகளில் பணபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு தமது சத்தியப்பிரமாணத்தினை மேற்கொண்டனர்.





























