வவுனியாவில் முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் வண்டி : ஒருவர் கைது!!

604

புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டர் வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, நெடுங்கேணி, கற்குளம் சந்தியில் புதுவருட தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கூட்டமைப்பின் நெடுங்கேணி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ம.செந்தூரன் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-