புலம் பெயர் தொழிலாளர்களுக்கான விசேட ஓய்வூதிய திட்டம் வழங்க தீர்மானம்!!

390

இவ்வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதிய திட்டம் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்றைய தினம்(02) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக விசேடஓய்வூதிய திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.மேலும் வெளிநாடுகளில் கடந்த காலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும், இவ்வருடம் வெளிநாடுகளை நோக்கி குடிப்பெயரும் பணியாளர்களின் நலத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல், போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.