கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 மாதங்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!!

365

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இன்று(03) அறிவித்துள்ளன.இன்று முதல் ஏப்ரல் வரை பிற்பகல் 3 மணி மற்றும் காலை 9 மணிவரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்படுவதால் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் காலை 8.30 மணி முதல் 4.30 மணிவரை திறந்து வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.