வீட்டில் யாரும் இல்லாத வேளையில் இளைஞன் செய்த காரியம்!!

609

புஸ்ஸல்லாவ நீவ் மெல்போட் தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் திவியராஜன் (வயது 23) என்ற இளைஞன் நேற்று (2) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தை உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இன்று (03) காலையில் வீடு திரும்புகையில் இவர் தூக்கில் தொங்கி உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய இளைஞரை அனுமதித்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக இவர் இறந்துள்ளார். சடலம் பிரேத அரையில் வைக்கபட்டு பிரேத பரிசோதனை¸ பொலிஸ் விசாரணை மற்றும் வாக்கு மூலங்களின் பின்னர் பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.

இந்த தற்கொலைக்கு காதல் தான் காரணம் என சந்தேகிக்கபடுகின்றது. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.