யாழ் நகரில் பாம்பைக் கண்டு ஓடிய மக்கள் : இலா­வக­மாகப் பிடித்த இளைஞர்!!

636

யாழ்ப்­பாணம் நகர் பகு­தியில் திடி­ரென புகுந்த நல்ல பாம்­பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்­சம்­பவம் நேற்றுக்(02.01.2017) காலை 10.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது.

சன நெரிசல் மிக்க இலங்கை மின்­சார சபை வீதிக்கு அருகில் திடீரென உட்­பு­குந்த குறித்த பாம்பு அங்­காங்கே ஓடித் திரிந்­தது. இதனால் பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வந்த மக்கள் பாம்பை கண்­ட­துடன் பதற்­றத்­துடன் சிதறி ஓடி­யதை காண முடிந்­தது.

குறித்த பாம்பு பின்பு அப்­ப­கு­தியில் உள்ள கடையொன்றுக்குள் சென்று குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைந்து கொண்­டது. இதனைப் பார்த்த அக்கடையின் உரி­மையாளர் பாம்பை குளிர்­சா­தனப் பெட்­டி­யிலி­ருந்து அகற்ற வீதியில் சென்­ற­வர்களின் உத­வியை நாடி­யுள்ளார்.

இதன் போது அப்­ப­கு­தியால் வந்த இளைஞர் ஒருவர் பாம்பைப் பிடிக்க பேரம் பேசி­ய­துடன் இலா­வ­க­மாக அப்பிள் கடை­யி­லி­ருந்து நல்­ல ­பாம்பை பிடித்து வேறு இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றார்.