யாழ்ப்பாணம் நகர் பகுதியில் திடிரென புகுந்த நல்ல பாம்பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்சம்பவம் நேற்றுக்(02.01.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
சன நெரிசல் மிக்க இலங்கை மின்சார சபை வீதிக்கு அருகில் திடீரென உட்புகுந்த குறித்த பாம்பு அங்காங்கே ஓடித் திரிந்தது. இதனால் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த மக்கள் பாம்பை கண்டதுடன் பதற்றத்துடன் சிதறி ஓடியதை காண முடிந்தது.
குறித்த பாம்பு பின்பு அப்பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் சென்று குளிர்சாதனப் பெட்டியில் மறைந்து கொண்டது. இதனைப் பார்த்த அக்கடையின் உரிமையாளர் பாம்பை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அகற்ற வீதியில் சென்றவர்களின் உதவியை நாடியுள்ளார்.
இதன் போது அப்பகுதியால் வந்த இளைஞர் ஒருவர் பாம்பைப் பிடிக்க பேரம் பேசியதுடன் இலாவகமாக அப்பிள் கடையிலிருந்து நல்ல பாம்பை பிடித்து வேறு இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றார்.