ஈராக்கில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 61 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சதர் நகரில் வேலைக்காக தினக்கூலி ஊழியர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
அங்கு காரில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, திடீரென காரில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் அங்கு நின்றிருந்த ஊழியர்களில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.






