வவுனியா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழப்பு!!

259

வவுனியா பொது வைத்தியசாலையில் புத்தாண்டு தினமான 01.01.2017 அன்று ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (02.01.2016) மாலை இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று (03.01.2016) மற்றொரு பிள்ளையும் இறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் அவர்களிடம் வினவிய போது..

புத்தாண்டு தினத்தில் (01.01.2017) ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்தார். இக் குழந்தைகளின் நிறை குறைவாக காணப்பட்டமையினால் சிறுவர் (குழந்தை) சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பாக இவர்களின் நிறை 600 கிராம், 550 கிராமாக காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.