மக்களே அவதானம் : இதுவரை ஏழு பேர் பலி!!

446

மோசமான நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கும் 23 வகையான மருந்துகள் போதையேற்றும் மாத்திரையாக விற்பனை செய்வதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்த வியாபாரம் சர்வதேசத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் விற்பனையாளர்களின் வலையமைப்பாக செயற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வர்த்தகத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காரணத்தினால் இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு அவசியமான அளவு மாத்திரம் அரசு மருந்தக மருத்துவம் வழங்கும் பிரிவு வழங்கியுள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக தனியார் வைத்தியசாலைகளுக்கும் அந்த மாத்திரைகளை வழங்கும் நடவடிக்கை அரசாங்க மருந்தகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்த மாத்திரைகள் வழங்குதல் மற்றும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதா என இரண்டு மாதத்திற்கு இரண்டு முறை குறித்த சபையினால் கண்கானிக்கப்பட்டு அறிக்கை பெற்றக் கொள்ளப்படுகின்றது.

இந்த மாத்திரை கொடூரமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வலி நிவாரணியாக வழங்கப்படுவதாகும்.

இந்த மாத்திரை இந்த நாட்டில் தயாரிக்கப்படாது. வெளிநாடுகளில் இவை தயாரிக்கப்பட்டு பல்வேறு முறையில் மோசடியான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

போதைப்பொருளாக உரிய அளவினை அதிக அளவு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

விசேடமாக B வகை மாத்திரை மற்றும் III குழுவிற்கான இந்த மாத்திரை மேற்கத்திய மாத்திரையாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

விசேடமாக ட்ரெமடோல் என்ற பெயருடைய மாத்திரை வகை எல்ட்ரோசோலா, CNS என்ற சுவாச கட்டமைப்பிற்கு தொடர்புடைய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்தாகும். அத்துடன் கொடூரமான மனநோய்களுக்காக வழங்கப்படும் 23 வகை மாத்திரைகள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றதென தெரியவந்துள்ளது.

மேலும் இருமலுக்கு வழங்கப்படும் பானி போன்ற மருந்தினை போதைப்பொருளாக அதிகம் பயன்படுத்தப்பட்டமையினால் தற்போதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற வைத்திய அறிக்கைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் இந்த மாத்திரைகள் தபால் ஊடாக கொண்டு வரும் நடவடிக்கை பொதுவாக மேற்கொள்ளப்படுவதாக சில நாட்களுக்கு முன்னர் 70 ஆயிரம் மாத்திரைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த மாத்திரைகள் மருந்தாக வழங்கப்படுவதனை விடவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது