சிறுமி மீது விழுந்த வீட்டுச்சுவர் – தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!!

336

முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி மீது வீட்டுசுவர் சரிந்து விழுந்து சுயநினைவிழந்த நிலையில்(கோமா) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பூதன்வயல் கிராமத்தை சேர்ந்த இராசேந்திரம் மதி (வயது9) என்னும் சிறுமியே இவ்வாறு பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமி தாயை இழந்து, மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவ்வாறான துயரம் நிகழ்ந்துள்ளதாக அந்த ஊர்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.