வீதி விபத்தில் பரிதாபமாக பலியாகிய மூதாட்டி!!

394

மட்டக்களப்பு ஏறாவூர் நெடுஞ்சாலை தன்னாமுனை என்ற இடத்தில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தள்ளார்.தன்னாமுனை களப்பு வீதியைச் சேர்ந்த வடிவேல் அன்னலெட்சுமி (வயது 72) என்பரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வழமையாக இரவு நேர உணவுக்காக இந்த மூதாட்டி கடையில் இடியப்பம் வாங்கச் செல்வதுண்டு.அதேபோன்று செவ்வாய்க்கிழமை இரவும் தனது வீட்டிலிருந்து கடைக்கு இடியப்பம் வாங்கச் செல்லும் போது நெடுஞ்சாலையைக் கடந்துள்ளார்.

அப்போது ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்டுள்ளார்.படுகாயமடைந்த மூதாட்டி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் குறிப்பிடப்பிட்டுள்ளது.

இதேவேளை, இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.