தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலங்களாக மாற்ற பேச்சுவார்த்தை!!

228

தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் கூறினார்.