வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

842

 
வவுனியா றம்பைவெட்டி கிராமத்தில் வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(04.01.2017) காலை இடம்பெற்றது.

வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் ஓர் கட்டமாக வவுனியா மாவட்டத்தில் றம்பைவெட்டி கிராமத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ஒவ்வென்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படவுள்ள இவ் வீடுகள் எதிர்வரும் யூன் மாதத்திற்குள் பூரணப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீளக்குடியேறிய மற்றும் புதிதாக குறியேறியுள்ள மக்களின் வீட்டுத்தேவையை கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இவ் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வீட்மைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் தயானந்த, தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் திருமதி வி.குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.