வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!!

267

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (05.01.2017) காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பாலசூரிய கருணரட்ன என்ற 52வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று காலை 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.