போதைப் பொருள் உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் வவுனியா, தவசிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு கிராம் 625 மில்லிக்கிராம் மாபா எனப்படும் போதைப் பொருள், 755 கிராம் கேரளா கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.






