8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரன்!!

257

பெரு நாட்டில் 8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசிஸ் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள Huancayo பகுதியைச் சேர்ந்தவர் Edith Paitan Quincho (8). இவர் அங்குள்ள San Francisco de Asis என்ற பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அச்சிறுமி தன்னுடைய பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அப்பகுதியின் தேசிய பல்கலைக்கழகத்தில் சூட்கேஸ் ஒன்றை கண்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அதனை சோதனை செய்து பார்த்த போது, சிறுமியின் உடல் அதில் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதி தொடர்பாக பொலிசார் சிறுமியை கொலை செய்த கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். கொலையாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு £4,800 பவுண்ட் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சியின் போது அவள் நடனம் ஆட சென்று விடுவாள். ஆனால் தற்போது நான் என்ன கூறுவது என்று கண்ணீர் விட்டு கதறிய தாயின் செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.