வன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தன் இயக்கத்தில் வெளிவரும் கடன்காரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியிட்டு விழா இன்று 2.30 அளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இத்திரைப்படத்துக்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைக்க, பாடல் வரிகளை பொத்துவில் அஸ்மின் மற்றும் பிரதாபன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாடல்களை கானா பாலா, ஜெயரூபன், சுபா, ஜெயந்தன், ஜெயப்பிரதா ஆகியோர் பாடியுள்ளனர்.
இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படம் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒரே தினத்தினத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ப.சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.