பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் நடாத்தப்பட உள்ள மாநாட்டிற்காக தெஹிவளை மிருக்க் காட்சிசாலை மிருகங்கள் ஹம்பாந்தோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
சிங்கங்கள், ஜகுவார், கடிரகள், ஒட்டகச் சிவிங்கி, குதிரைகள் உள்ளிட்ட 25 மிருகங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான விசேட கூடுகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிருக்கக்காட்சிச் சாலைக்கு சொந்தமான இடத்திற்கு மட்டுமே மிருகங்களை எடுத்துச் செல்ல முடியும் என சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மிருகங்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்த இடத்தில் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குரியே என குறிப்பிட்டுள்ளனர்.