கின்னஸ் சாதனை நத்தார் மரம் அகற்றப்பட்டது!!

531

துறைமுக அதிகார சபையின் தலைமையில் காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரம் இரண்டு வாரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் நேற்று(06.01) கழற்றி அகற்றப்பட்டது.

கப்பல் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சமூகப் பணியின் ஒரு அங்கமாக நிர்மாணிக்கப்பட்ட உலகின் உயரமானதாக கருதப்படும் இந்த நத்தார் மரமானது, கிரேன் உதவியுடன் கழற்றியகற்றப்பட்டது.

இந்த நத்தார் மரத்தின் உருவாக்கத்துக்காக சுமார் 1 கோடியே இருபது இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.