வவுனியா மாவட்டத்தில் கணித, விஞ்ஞான, கலைப்பிரிவுகளில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்!!

1107

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (இம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகீரதன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விஞ்ஞானப் பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராசா 3 ஏ சித்திகளைப் பெற்று இரண்டாமிடத்தினையுமும் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் (ஆங்கில மொழி) தேவகி பிரபுராம் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையுமும் கலைப்பிரிவில் ஆரதி தசாவதாரன் சர்மா  3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலாமிடத்தினையும் கணிதப் பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.