வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மைதான எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் நாட்டும் நிகழ்வு!!

704

 
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மைதான எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் நாட்டும் நிகழ்வு இன்று (07.01.2017) நடைபெற்றது.

கடந்த 30 வருடங்களாக விமானப்படையினர் எல்லைக் குட்பட்டிருந்த மைதானம் மீண்டும் பாடசாலையிடம் ஒப்படைக்கப்பட்டு, எல்லை வேலி கொங்கிறீட் தூண்கள் இடும் பணி இன்று புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை அருள்தந்தை சத்தியராஜ் அடிகளாரின் இறை ஆசிர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலை 125 ஆண்டுகளுக்கு முன்பாக கத்தோலிக்க குருக்களால் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களால் வழிநடத்தப்பட்டு தற்போது திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளாள் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.