வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலய சிரமதானமும், கலந்துரையாடலும்!!

542

 
வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிரமதானப் பணியும், ஆலயத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் இன்றையதினம்(08.01.2017) ஆலயத் தலைவர் பாபு தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் வ.பிரதீபன் ஒழுங்கமைப்பில் ஆலயத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவன், கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.