44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகளுடன் கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி விற்பனை பிரதிநிதியொருவரின் வாகனமே கடத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நான்கு பேர் கடத்தியுள்ளனர்.
44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகள் மற்றும் 7 லட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தை கடத்தி வாகன குறித்த விற்பனைப் பிரதிநிதியை கொலன்னாவ பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






