வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

1191

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் திருமதி பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3A, அ.அபிராமி 3A, வி.டிலக்சனா 3A, யோ. ரட்சனா 2AB, த.டிலக்சனா 2AB, ஆகிய மாணவிகள் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4ம் இடத்தினையும் சு. பிரியதர்சினி 6ம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3A சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தகத் துறையில் கீர்த்திகா பொன்ராசா 3A, ஜர்சனா ஜெயமோகன் 3A, துசாந்தி கனகலிங்கம் 3A, திவ்வியா மோகனராஜா 3A சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தகப் பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும்100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை இப் பாடசாலையில் இருந்து விஞ்ஞானப் பிரிவில் 55 மாணவிகளும் கலைப் பிரிவில் 52 பேரும் வர்த்தகப் பிரிவில் 46 பேரும் உயிரியல் தொழில்நுட்பப்பிரிவில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தனர்.