வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

758

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் ரங்கநாதன் யதுகுலன் வர்த்தக பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலாமிடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் ச.சுபாஸ்கரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வர்த்தகப்பிரிவில் ரங்கநாதன் யதுகுலன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும், கணிதப்பிரிவில் செல்வதேவன் ஹனுஷ்யன் 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

பாடசாலை வரலாற்றிலும் வடக்கு வலய வரலாற்றிலும் வர்த்தப் பிரிவில் முதலாமிடத்தினை பெற்றமை இதுவே முதற்தடவையாகும்.

மேலும் எமது பாடசாலையில் வர்த்தப் பிரிவில் ஆறு மாணவர்களும், கலைப்பிரிவில் எட்டு மாணவர்களும், கணிதப் பிரிவில் இரண்டு மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.