1000 நாட்­­க­ளா­கியும் மீட்­கப்­ப­டாத நைஜீரிய மாண­வி­கள்!!

640

நைஜி­ரி­யாவில் போகோ­ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளினால் கடத்தப்பட்ட பாட­சாலை மாண­விகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடு­தலை செய்­யப்­ப­டாத நிலை நீடித்து வரு­கி­றது.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீ­ரிய பாட­சா­லையில் படிக்கும் 200 க்கும் மேற்­பட்ட மாண­வி­கள் கடத்திச் செல்லப்பட்டனர்.

கடத்­த­லுக்கு பின்னர் மூன்று ஆண்­டு­களில் 21 மாண­விகள் மட்டும் இது­வரை விடு­தலை செய்­யப்­பட்­டனர். அதில் பலர் கற்­ப­மாக இருந்­தனர்.

கடத்­தப்­பட்ட மாண­வி­களை மீட்க நைஜி­ரிய அரசு உலக நாடு­களின் உத­வி­யோடு தீவிர முயற்சி செய்து வரு­கி­றது.

இந்­நி­லையில், போகோ ஹராம் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளால் கடத்­தப்­பட்ட மாண­விகள் 1000 நாட்கள் ஆகியும் இன்னும் விடு­தலை செய்­யப்­ப­டாத அவலம் நீடித்து வரு­கி­றது.

கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின் பிடியில் மீத­முள்ள 195 பாட­சாலை மாண­விகளை விரைவில் மீட்போம் போம் என நைஜீ­ரிய ஜனா­தி­பதி முகம்மது புகாரி நம்பிக்கை தெரிவித்தார்.