வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தில் 53மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

606

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 53 மாணவர்கள்கள் பல்கலைக்கழகத்திற்கான தகுதியினை பெற்றுள்ளதாக பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்ரம்சின் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..

தொழிநுட்பப்பிரிவில் அகிலா 2BC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் சங்கா அசிஸ் சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும்,

வர்த்தகப்பிரிவில் ஜெகதிஸ் கண்ணா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் நஸ்மிலா 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 17வது இடத்தினையும் சாஸிதா பர்வீன் A2B சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 61வது இடத்தினையும்

கலைப்பிரிவில் முகமட் கபில் ABC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 80வது இடத்தினையும், கணிதப்பிரிவில் ஸ்பாக் ABC சித்திகளையும் பயாஸ் 3C சித்திகளையும்

விஞ்ஞானப்பிரிவில் சஸ்மிதா 3B சித்திகளையும், ரிஸ்வான் 2BC சித்திகளையும் சப்னா 3C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் 53 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.