வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இரு முற்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு ச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இரு முச்சக்கரவண்டி சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.
இந் நிலையில் இவ் விபத்து குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ஜெரோம் ரோய்-














