ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகின்றேன் : கங்குலி!!

350

saurav_ganguly

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்ததற்கு தான் வருத்தப்படுவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 6வது ஐபிஎல் போட்டியில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவானுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டது.

இதே போல சித்தார்த் திரிவேதிக்கும் ஒரு ஆண்டும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமித்சிங்குக்கு 5 ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்துக்காக வருத்தப்படுகிறேன் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தால் ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது சரியான முடிவு தான்.
எனினும் இதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் தனது திறமையை தேவையில்லாமல் வீணடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.